கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு விமான சேவை ஜூலை 16 முதல் மீண்டும் தொடக்கம்

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு சரக்கு விமான சேவை, தேவையான பரிசோதனை கருவிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதால், ஜூலை 16 முதல் மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் அறிவித்தனர்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு சரக்கு விமான போக்குவரத்து சேவை வருகின்ற ஜூலை 16 முதல் மீண்டும் செயல்படும் என்று கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கான உள்நாட்டு சரக்கு போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மத்திய விமான பாதுகாப்பு கழகத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான தேவையான பரிசோதனை சாதனங்கள் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது.



இந்த நிலையில், தற்போது தேவையான பரிசோதனை கருவிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கோவை விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், முறையான அனுமதி பெற்று கோவை விமான நிலையத்திலிருந்து பிற நகரங்களுக்கு 100 சதவீதம் சான்று பெற்ற சரக்குகளை அனுப்ப முடியும் என்றும், இந்த சேவை வருகின்ற ஜூலை 16 தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சரக்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை உடனுக்குடன் அனுப்ப முடியாமல் இழப்பை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சினை குறித்து பல வர்த்தக அமைப்புகள் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் விமான நிலைய ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...