கோவை ராஜவீதியில் முதியவரை ஏமாற்றி 5 சவரன் நகை திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடையில் முதியவரை ஏமாற்றி 5 சவரன் நகையை திருடிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து, முதியவரை ஏமாற்றி 5 சவரன் நகையை மர்ம நபர் திருடிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் ஆர் வி நகைக்கடை என்ற பெயரில் ராஜவீதி மற்றும் பெரிய கடை வீதியில் நகைக்கடைகள் நடத்தி வருகிறார். நேற்று காலை, ராஜவீதியில் உள்ள கடைக்கு வந்த மர்ம நபர் பத்து சவரன் சங்கிலி கேட்டுள்ளார். டிசைன்களைப் பார்த்த அந்த நபர் திடீரென ஒரு தங்க சங்கிலியை கீழே போட்டு, அனைவரும் இருந்ததால் அதை எடுத்துக் கொடுத்துள்ளார். பின்னர் டிசைன் சரியில்லை என்று கூறி மற்ற கடைகளுக்குச் சென்றுள்ளார்.

அன்று மாலை, நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு வீட்டுக்கு மதிய உணவுக்குச் சென்றபின், அதே நபர் மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் விஷ்ணுவின் தந்தை இருந்த நிலையில், காலையில் பார்த்த அதே தங்க சங்கிலி வேண்டும் எனவும், மற்ற கடைகளில் அது போன்ற டிசைன் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய விஷ்ணுவின் தந்தை நகையை எடுப்பதற்கு நகர்ந்த கணத்தில், கடையில் வைத்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை திருடிவிட்டு, நகை வேண்டாம் என்று கூறி அந்த நபர் தப்பியோடிவிட்டார். சந்தேகம் அடைந்த விஷ்ணுவின் தந்தை நகைகளைச் சரிபார்த்தபோது, 83 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுவின் தந்தை உடனடியாக தனது மகனுக்கு தகவல் தெரிவித்தார்.



கடைக்கு வந்த விஷ்ணு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இது தொடர்பாக பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடையில் முதியவரின் கவனத்தை திசைதிருப்பி 5 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், பல்வேறு கடைகளில் திருட முயன்ற அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அதன் காரணமாக மாஸ்க் அணிந்திருந்ததாகவும் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...