கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை காந்தி பார்க்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களைக் கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.


Coimbatore: கோவை காந்தி பார்க்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களைக் கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

11.07.2024 வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் VMC. மனோகரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் MN. கந்தசாமி, மாமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் அழகு ஜெயபாலன், மாநில பொதுச் செயலாளர்கள் பச்சைமுத்து, PS. சரவணக்குமார், மாநில செயலாளர் V. விஜயகுமார், மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மாவட்ட துணைத் தலைவர் V. வெங்கிடபதி வரவேற்புரை நிகழ்த்தினார். சர்க்கிள் தலைவர் ஐ.எஸ். மணி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சுல்தான்பேட்டை கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி. ஆறுச்சாமி, வி.எம். ரங்கசாமி, செல்வபுரம் ஆனந்த், OBC செயல் தலைவர் பழனிச்சாமி, மோகன்ராஜ், லலிதா மோகன்ராஜ், கணபதி அசோக் குமார், பேரூர் மயில், மாரியப்பன் துரை அருள் தாஸ், ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு வட்டாரத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளைக் கண்டித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான அவதூறு குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், அரசியல் நாகரிகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...