திருப்பூரில் பள்ளி மாணவியின் தாய் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு

திருப்பூர் அம்மன் நகரில் பள்ளி மாணவியை அழைத்து வர சென்ற தாய் சிவகாமி, எதிர்பாராத விபத்தில் லாரி பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: திருப்பூர் அருகே உள்ள வாவிபாளையம், திருமுருகன் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி சிவகாமி, தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை வழக்கம்போல் தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர சென்ற சிவகாமி, திருப்பூர் அம்மன் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அங்குள்ள ஒரு கடையின் முன் நின்றிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் திடீரென இயக்கப்பட்டதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.



அப்போது அவ்வழியே வந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவ தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த திருமுருகன்பூண்டி போலீசார், சிவகாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டுநர் முத்துராஜா மற்றும் லாரி ஓட்டுநர் பவளமணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...