கோவை சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு

கோவையில் சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். நிறுவனம் அதிக வட்டி வாக்குறுதி அளித்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு.


கோவை: கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் துரைசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் மனு அளித்துள்ளார். அதில், கோவை உடையாம்பாளையத்தில் உள்ள ஃபிளவர் வேலன்சியா அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வந்த சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிறுவனம் மக்களிடம் பெறப்படும் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி தருவதாகவும், பல்வேறு திட்டங்கள் வாயிலாக அதிக லாபம் பெறலாம் என்றும் கூறி பலரிடம் முதலீடுகளை பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், நிதி நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குநர்கள் ரிதுவரணன், ஸ்ரீஹரி, பாலன் நாராயணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இவ்வழக்கின் இறுதி அறிக்கையை முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்கப் பெறாதவர்கள் காலம் தாழ்த்தாமல் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் அமைந்துள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் தங்களிடம் உள்ள தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...