கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிகரிக்க நடவடிக்கை

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை அதிகரிக்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது தொழில்துறையினர் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளை விரைவில் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல் தொழில் துறையினர் மற்றும் விமான பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கு குளோபல் போரம் அமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்துள்ளது வரவேற்கத்தக்கது. விரைவில் நிலங்கள் ஏஏஐ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன," என்றார்.

சமீபத்தில் கோவையில் விமான நிறுவன அதிகாரிகளுடன் சிஐஐ சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. ஸ்கூட் நிறுவனம் சிங்கப்பூருக்கு வாரத்தில் எட்டு சேவைகள் வழங்க வேண்டும் என்றும், 236 பேர் அமரக்கூடிய ஏ 321 ரக விமானங்களை அதிகம் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இண்டிகோ நிறுவனம் தற்போது 20 உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. கோவை-புனே இடையேயான இரவு சேவையை காலை நேரத்திற்கு மாற்றவும், கோவை-கோவா இடையேயான காலை 7 மணி சேவையை மதியம் 12 மணிக்கு மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், கோவை-பெங்களூரு, கோவை-திருவனந்தபுரம், கோவை-மங்களூரு இடையே சிறிய ரக விமான சேவைகளைத் தொடங்கவும் வலியுறுத்தப்பட்டது.

கோவையில் இருந்து சிங்கப்பூர், இலங்கை மற்றும் அபுதாபிக்கு விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏர்இந்தியா தற்போது டெல்லி-கோவை-டெல்லி இடையே இரண்டு சேவைகளை வழங்கி வருகிறது. விஸ்தாரா ஒரு விமான சேவையை வழங்குகிறது, மேலும் விரைவில் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கோவை-டெல்லி இடையே காலை விமான சேவை வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் டெல்லியில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஏர் இந்தியா சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விமான நிறுவன அதிகாரிகள், கோவை தங்களுக்கு வணிக ரீதியாக சிறந்த விமான நிலையமாக திகழ்வதாகவும், விரைவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானசேவை அதிகரிக்கவும், சரக்கு கையாளுதலை விரிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இத்தகவல்கள் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கொங்கு குளோபல் போரம் இயக்குநர் சதீஷ் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...