கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிகரிக்க நடவடிக்கை

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை அதிகரிக்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது தொழில்துறையினர் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளை விரைவில் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல் தொழில் துறையினர் மற்றும் விமான பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கு குளோபல் போரம் அமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்துள்ளது வரவேற்கத்தக்கது. விரைவில் நிலங்கள் ஏஏஐ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன," என்றார்.

சமீபத்தில் கோவையில் விமான நிறுவன அதிகாரிகளுடன் சிஐஐ சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. ஸ்கூட் நிறுவனம் சிங்கப்பூருக்கு வாரத்தில் எட்டு சேவைகள் வழங்க வேண்டும் என்றும், 236 பேர் அமரக்கூடிய ஏ 321 ரக விமானங்களை அதிகம் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இண்டிகோ நிறுவனம் தற்போது 20 உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. கோவை-புனே இடையேயான இரவு சேவையை காலை நேரத்திற்கு மாற்றவும், கோவை-கோவா இடையேயான காலை 7 மணி சேவையை மதியம் 12 மணிக்கு மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், கோவை-பெங்களூரு, கோவை-திருவனந்தபுரம், கோவை-மங்களூரு இடையே சிறிய ரக விமான சேவைகளைத் தொடங்கவும் வலியுறுத்தப்பட்டது.

கோவையில் இருந்து சிங்கப்பூர், இலங்கை மற்றும் அபுதாபிக்கு விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏர்இந்தியா தற்போது டெல்லி-கோவை-டெல்லி இடையே இரண்டு சேவைகளை வழங்கி வருகிறது. விஸ்தாரா ஒரு விமான சேவையை வழங்குகிறது, மேலும் விரைவில் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கோவை-டெல்லி இடையே காலை விமான சேவை வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் டெல்லியில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஏர் இந்தியா சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விமான நிறுவன அதிகாரிகள், கோவை தங்களுக்கு வணிக ரீதியாக சிறந்த விமான நிலையமாக திகழ்வதாகவும், விரைவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானசேவை அதிகரிக்கவும், சரக்கு கையாளுதலை விரிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இத்தகவல்கள் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கொங்கு குளோபல் போரம் இயக்குநர் சதீஷ் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...