தமிழகம் முழுவதும் 1500 சவரன் நகை கொள்ளையடித்த கும்பலின் தலைவன் கோவையில் கைது

கோவையில், தமிழகம் முழுவதும் 68க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். 1500 சவரன் நகை மற்றும் 1.76 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாநகர தனிப்படை காவல்துறையினர் தமிழகம் முழுவதும் கொள்ளை உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் மூர்த்தியை கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக கோவை மாநகரில் ரயில் வழித்தடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து மர்ம கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். கோவை மாநகர ஆணையரின் வழிகாட்டுதலின் பேரில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் வினோத் குமார் மற்றும் காட்டூர் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாத காலமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.



தீவிர விசாரணையின் அடிப்படையில் ராட்மேன் என்று அழைக்கப்படும் மூர்த்தி (36) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 18 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் 68க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளி அம்சராஜ் (26) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தங்க நகைகள், விலை உயர்ந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி கடந்த 2020 முதல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இரும்பு ராடின் உதவியோடு வீட்டை உடைக்கும் திறமை உடையவர் என்பதால் ராட்மேன் என்றும் அழைக்கப்படுகிறார். மூர்த்தி தலைமையிலான கொள்ளை கும்பலில் மொத்தம் ஏழு பேர் உள்ளனர். பெரும்பாலும் தனது உறவினர்களை வைத்தே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ரயில்வே தடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் நோட்டமிட்டு ஆட்கள் குறைவாக உள்ள வீடுகளில் மாறுவேடத்தில் புகுந்து அங்குள்ள ஆட்களைக் கட்டிப்போட்டுவிட்டு வெவ்வேறு மொழிகளில் பேசி கொள்ளையடிப்பது இவர்களது வழக்கமாக இருந்திருக்கிறது. சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், துடியலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

காவல்துறையினர், கோவையில் மட்டும் 63 சவரன் நகையை பறிமுதல் செய்துள்ளனர். மூர்த்தி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி நிலத்தில் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். ராஜபாளையத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பின்னிங் மில் மற்றும் ஒரு கோடி மதிப்புள்ள 53 சென்ட் நிலம் வாங்கியுள்ளார்.



கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் கூறுகையில், "மொத்தமாக உள்ள 68 வழக்குகளில் தோராயமாக 1500 சவரன் நகை, 1.76 கோடி வரையிலான ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளை தனிப்படை தேடி வருகிறது" என்றார்.

எனவே இனி கோவை மாநகரில் குற்றங்கள் நடைபெறாது.‌ கோயம்புத்தூர் மாநகரத்தை பொருத்தவரை முன்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை வாரம் ஒரு முறை நேரடியாக சென்று, அவர்கள் தற்போது என்ன செய்து வருகிறார்கள் என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்." என்றும் அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...