கோவை கல்லாறு அருகே கார் மீது பைக் மோதி விபத்து: இரண்டு இளைஞர்கள் பரிதாப பலி

கோவை கல்லாறு அருகே நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனைவி பயணித்த அரசு கார் மீது KTM பைக் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது.


கோவை: கோவை கல்லாறு அருகே கார் மீது பைக் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் அவர்களின் மனைவி ஜூலை 8 ஆம் தேதி அரசு காரில் கோவைக்கு மேட்டுப்பாளையம் வழியாகச் சென்றார். முதல்நிலை காவலர் தமிழ் என்பவர் அந்த காரை ஓட்டிச் சென்றார்.

கார் கல்லாறு அருகே வந்து கொண்டிருந்தபோது, ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த காட்டேஜ் ஊழியர் அல்தாஃப் (21) மற்றும் கல்லூரி மாணவர் ஜூனைத் (19) ஆகிய இருவரும் KTM மோட்டார் பைக்கில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நோக்கிச் சென்றனர்.

எதிர்பாராத விதமாக, அல்தாஃப் அதிவேகமாக ஓட்டிச் சென்ற KTM மோட்டார் பைக் போலீஸ் அதிகாரியின் மனைவி பயணித்த காரின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.



இந்த விபத்தில் மோட்டார் பைக்கில் தீப்பற்றி மளமளவெனப் பற்றி எரியத் துவங்கியது. உஷாரான அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அல்தாஃப் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜூனைத் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...