பொள்ளாச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூவர் கைது

பொள்ளாச்சியில் மூன்று வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை ஜூலை 7 அன்று மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்றது.

முதல் சம்பவத்தில், பொள்ளாச்சி நல்லூர் வனப்பகுதி சோதனை சாவடி அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக சேலம் மேச்சேரியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 46) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 37 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டாவது சம்பவத்தில், பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் லாட்டரி டிக்கெட் விற்றதாக பொள்ளாச்சி சின்னம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 72) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 24 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரூ. 200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மூன்றாவது சம்பவத்தில், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். இதில், பொள்ளாச்சி பழனியப்பா லே-அவுட்டைச் சேர்ந்த பேச்சுமுத்து (வயது 65) கைது செய்யப்பட்டார்.

இந்த மூன்று சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...