பொள்ளாச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூவர் கைது

பொள்ளாச்சியில் மூன்று வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை ஜூலை 7 அன்று மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்றது.

முதல் சம்பவத்தில், பொள்ளாச்சி நல்லூர் வனப்பகுதி சோதனை சாவடி அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக சேலம் மேச்சேரியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 46) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 37 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டாவது சம்பவத்தில், பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் லாட்டரி டிக்கெட் விற்றதாக பொள்ளாச்சி சின்னம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 72) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 24 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரூ. 200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மூன்றாவது சம்பவத்தில், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். இதில், பொள்ளாச்சி பழனியப்பா லே-அவுட்டைச் சேர்ந்த பேச்சுமுத்து (வயது 65) கைது செய்யப்பட்டார்.

இந்த மூன்று சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...