கோவையில் தொலைந்த, திருடுபோன 168 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாநகர காவல் அலுவலகத்தில் தொலைந்த மற்றும் திருடப்பட்ட 168 கைப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


Coimbatore: கோவை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தற்போதுவரை 168 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஜூலை 6 அன்று கோவை மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், உரியவர்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், "கோவை மாநகரில் தொலைந்த மற்றும் திருடுபோன 168 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த கைப்பேசிகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு பேசி நேரிலும், கூரியர் மூலமும் போலீஸார் கைப்பேசிகளை மீட்டுள்ளனர். இன்னும் 200 கைப்பேசிகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. கைப்பேசி பறிப்பு தொடர்பாக நடப்பாண்டில் தற்போதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று கூறினார்.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...