நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை குறைந்துள்ளது - வே.ஈஸ்வரன் குற்றச்சாட்டு

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே.ஈஸ்வரன் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை 87% குறைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் நீட் தேர்வு குறித்து அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வே.ஈஸ்வரன் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



"2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படித்து வந்தனர். ஆனால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 87% அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது," என்று வே.ஈஸ்வரன் தெரிவித்தார்.

நீட் தேர்வு இல்லாவிட்டாலும் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்த முடியும் என்றும், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிராமப்புற மாணவர்கள் நீட் கோச்சிங் மையங்களுக்குச் சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...