நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை குறைந்துள்ளது - வே.ஈஸ்வரன் குற்றச்சாட்டு

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே.ஈஸ்வரன் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை 87% குறைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் நீட் தேர்வு குறித்து அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வே.ஈஸ்வரன் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



"2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படித்து வந்தனர். ஆனால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 87% அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது," என்று வே.ஈஸ்வரன் தெரிவித்தார்.

நீட் தேர்வு இல்லாவிட்டாலும் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்த முடியும் என்றும், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிராமப்புற மாணவர்கள் நீட் கோச்சிங் மையங்களுக்குச் சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...