நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை குறைந்துள்ளது - வே.ஈஸ்வரன் குற்றச்சாட்டு

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே.ஈஸ்வரன் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை 87% குறைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் நீட் தேர்வு குறித்து அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வே.ஈஸ்வரன் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



"2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படித்து வந்தனர். ஆனால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 87% அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது," என்று வே.ஈஸ்வரன் தெரிவித்தார்.

நீட் தேர்வு இல்லாவிட்டாலும் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்த முடியும் என்றும், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிராமப்புற மாணவர்கள் நீட் கோச்சிங் மையங்களுக்குச் சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...