அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தந்தை சொத்து அல்ல; ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து - கே.சி. பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு அதிமுக அவரது தந்தை சொத்து அல்ல. அதிமுக ஒன்றை கோடி தொண்டர்களின் சொத்து என்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல்கட்டமாக சசிகலாவை சந்திக்க இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.


Coimbatore: கோவை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி, எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடந்த 13 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தன் மீது அவதூறாக பேசியதன் அடிப்படையில் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுகவின் வாக்குகள் திமுகவிற்கு சென்றிருப்பதாகவும், கோவையிலும் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



"அதிமுகவை வெற்றி பெற வைக்க நினைக்கும் ஒவ்வொருவரையும் அரவணைப்பது தான் நல்லது. உடல்நிலை கருதிதான் ஜானகி அம்மா ஒதுங்கிக் கொண்டார். பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்தார். அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். ஆனால் அது தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்," என்று கே.சி. பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கிளை செயலாளர் அளவிலேயே செயல்படுவதாகவும், யாரையும் அரவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார். மேலும், எடப்பாடி பேசுவது எல்லாம் அரசியல் அறியாமையில் பேசுவதாகவும் அவர் கூறினார்.

"அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் தந்தை சொத்து அல்ல. அது ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து," என்று கே.சி. பழனிச்சாமி வலியுறுத்தினார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இறுதியாக, ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல் கட்டமாக சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...