புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் குட்டிகரணம் போட்டு பொதுமக்கள் போராட்டம்

அன்னூர் வட்டத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையம் ஊராட்சியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.



அப்போராட்டத்தின் போது, தங்கள் ஊருக்குள் மதுபானக் கடை அமைந்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.



அதே போல, இந்துமக்கள் கட்சியின் சார்பாக பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குட்டிகாரணம் போட்டு அக்கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கரவழி, மாதப்பூர், கணியூர் சாலை மற்றும் ஊஞ்சப்பாளையம் சாலையில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளில் மதுபான கடை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தி, மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கோஷங்களை எழுப்பினர்.

இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகள் இருப்பதாலும், பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் குடிநீர் தொட்டி மற்றும் கோவில் அருகில் புதிதாக மதுபான கடை அமையவிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...