குரூப் 2 தேர்வுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் - மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பட்டதாரிகள் இவற்றில் பங்கேற்கலாம். SmartBoard, இலவச Wifi, நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்வுகளுக்கு மொத்தம் 2,327 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குரூப் 2 தேர்வுக்கு 507 பணியிடங்களும், குரூப் 2A தேர்வுக்கு 1,820 பணியிடங்களும் உள்ளன. முதல்நிலைத் தேர்வு 14.09.2024 அன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். சிறந்த பயிற்றுநர்களால் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மையத்தில் SmartBoard, இலவச Wifi வசதி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியவை உள்ளன.

பயிற்சி வகுப்புகளுடன் வார தேர்வுகள் மற்றும் முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் (பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள்) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரலாம். மேலும் விவரங்களுக்கு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் அருகிலுள்ள மையத்தை நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...