உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில் இரத்த தானம் முகாம்

வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில், மத்திய பண்ணை வளாகத்தில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்தனர்.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதி அன்று உலக இரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. பொள்ளாச்சியில் உள்ள வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில், மத்திய பண்ணை வளாகத்தில், ஜூன் 14ம் தேதி அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.



இந்த முகாமை, வாணவராயர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் G.தாமோதரன் மற்றும் முனைவர் N.நவீன், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்தனர்.



இம்முகாமில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இதர மாணவர்களில் சுமார் 50 பேர் மற்றும் கல்லூரியின் 10 பேராசிரியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.



இதன் மூலம் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்வதோடு சமூக நலனில் தங்களுக்கு உள்ள பங்களிப்பையும் பதிவு செய்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...