தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது - கோவை ஆட்சியரிடம் தேமுதிக புகார்

அரசின் துணையோடு தான் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக அரசு தான் முற்றிலும் காரணம். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் கருப்பு சட்டை அணிந்து புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக அரசு தான் முற்றிலும் காரணம். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை, கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும்.



கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் கருப்பு சட்டை அணிந்து வந்து புகார் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்வாகி சந்துரு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக், கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் நடைபெறுகிறது. இதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும். மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கள்ளச்சாராயம் குடித்து 63 பொதுமக்கள் மரணத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய மரணத்திற்கு ஆளுகின்ற திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ(CBI) விசாரணைக்கு உடனடியாக மாற்ற தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும். தமிழகத்தில் நடக்கும் அனைத்து சாராய ஆலைகளும் ஆளும் கட்சியினரால் நடத்தப்படுகிறது. எனவே சாராய ஆலைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...