தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது - கோவை ஆட்சியரிடம் தேமுதிக புகார்

அரசின் துணையோடு தான் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக அரசு தான் முற்றிலும் காரணம். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் கருப்பு சட்டை அணிந்து புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக அரசு தான் முற்றிலும் காரணம். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை, கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும்.



கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் கருப்பு சட்டை அணிந்து வந்து புகார் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்வாகி சந்துரு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக், கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் நடைபெறுகிறது. இதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும். மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கள்ளச்சாராயம் குடித்து 63 பொதுமக்கள் மரணத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய மரணத்திற்கு ஆளுகின்ற திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ(CBI) விசாரணைக்கு உடனடியாக மாற்ற தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும். தமிழகத்தில் நடக்கும் அனைத்து சாராய ஆலைகளும் ஆளும் கட்சியினரால் நடத்தப்படுகிறது. எனவே சாராய ஆலைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...