தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது - குனியமுத்தூரில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டுப்பாடு இல்லாமல் தமிழகத்தில் செயல்படுகின்றன. பயிற்சி மையங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை விளம்பரமாக வெளியிடுவது சட்டத்திற்கு புறமானது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஜூன்.27) செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 63 பேர் பலியாகியுள்ளனர். இந்த மரண ஓலத்தின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க, அதிமுக 56வது விதிகீழ் சட்டசபையை ஒத்திவைத்து, விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தது. இதில் ஏற்பட்ட அமளியால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழக சட்டமன்றத்தில் இதுவரை நடக்காத சம்பவம் அல்ல. இதற்கு முன்பு அவையை ஒத்திவைத்து முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது என்றார். எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று 63 பேர்களின் மரணத்திற்கு காரணம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராயம் மரணங்கள் போல் இனி தமிழகத்தில் ஏற்படக்கூடாது. இனிவரும் காலத்தில் நடக்காமல் இருக்க, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒரே தீர்வாகும் என்றார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலை தூக்காமல் இருக்க, ஜூலை ஆறாம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெறும் என்று கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி, அதில் பூரண மதுவிலக்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் மற்றும் அமைப்பு தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி, பல மாநிலங்களில் நீட் தேர்வு மோசடியை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது என்றார்.



நீட் தேர்வை நடத்தும் நடைமுறையில் சட்டம் வலுப்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், புதிய பலமான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.ஒரு காலத்தில் நீட் தேர்வை தான் வரவேற்றதாகவும், அன்றைய காலகட்டத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. எனவே நேர்மையாக பொதுவான தேர்வு இருந்தால் நல்லது என்று கருதியதால் நீட் தேர்வு தேவை என்று நினைத்தோம். ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது என்றார்.

நல்ல மாணவர்கள் மருத்துவத் துறைக்கு வர வேண்டும் என்ற நோக்கில் ஆதரவு தெரிவித்து இருந்ததாகவும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டுப்பாடு இல்லாமல் தமிழகத்தில் செயல்படுகின்றன என குற்றம் சாட்டினார். பயிற்சி மையங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை விதிமுறைகளை மீறி பயிற்சி நிறுவனங்கள் விளம்பரமாக வெளியிடுவது சட்டத்திற்கு புறமானது என்று கூறினார். தேர்வுகளில அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை பள்ளியில் வெளியிடுவதை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

வணிக ரீதியான வியாபார நோக்கில் செயல்பாடு இது என்று கூறிய அவர், பயிற்சி மையங்கள் என்ற பெயரில் பெற்றோர்கள் கோடி கணக்கில் பணம் செலவு செய்வதை தடுக்க அரசு முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பள்ளிகளிலேயே ஒருங்கிணைந்த பாட முறையை கொண்டு வந்தால் போதுமானது. இதற்காக தனியாக பயிற்சி மையங்கள் தேவையில்லை என்றார்.

அரசு பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் தகுதி தேர்வுக்கு எப்படி தயார் செய்வது என்பது குறித்து பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும் என்றார். பயிற்சி மையங்கள் மூலமாக தேர்வுகளில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாக குற்றம் சாட்டிய டாக்டர் கிருஷ்ணசாமி, இதனை தவிர்க்க அன்றாட பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...