கோவை மத்திப்பாளையத்தில் திமுக சார்பில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலில் அன்னதானம்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் 40 கோவில்களில் அன்னதானம் வழங்க திட்டமிட்டப்பட்டது.

இதன் துவக்கமாக பஞ்சமி நாளை முன்னிட்டு கோவை தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்வை தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் கூறியதாவது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி வழிகாட்டுதல்படி முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவு விழா மற்றும் தமிழக முதல்வர் தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றதையும், மேலும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக கழத்தையும் வழி நடத்திடவும், தமிழக மக்களின் நிரந்திர முதல்வராக பணியாற்றிட வேண்டியும்,அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்சிறந்த முறையில் மக்கள் பணியாற்றி வேண்டி 40 திருக்கோவில்களில் அன்னதானம் வழங்க திட்டமிட்டு இருந்தோம்.

இதன் தொடக்க விழாவாக கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலில் சிறுபான்மை நல பிரிவு சார்பில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவை தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி துவக்கி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை சார்கார்சாமகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டத்தரசி அம்மன் கோவிலில் தொடர்ந்து 7 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து 40 கோவில்களில் அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தெரிவித்தார்.

இந்த அன்னதான விழா தொடங்குவதற்கு முன் ஶ்ரீ விஸ்ணு மாய திருக்கோவில் சுவாமிகள் அஸ்வின் யாக பூஜை நடத்திட, அம்மனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனையை இக்கோவில் சுவாமிகள் இராஜேந்திரன் செய்தார். இந்த விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஜோதிடர், சிவபக்தர், காளி உபாசகர் சிவகுருநாதன் செய்தார். இந்த விழாவில் பக்தர்கள், பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...