அதிமுக ஆட்சியில் போட்டப்பட்ட வழக்கில் இருந்து திமுக நிர்வாகிகள் விடுதலை - கோவை நீதிமன்றம் உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சியின்போது, நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போடப்பட்ட வழக்கில் இருந்து திமுக நிர்வாகிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து (27.8.2019) அன்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போடப்பட்ட வழக்கு விசாரணை கோவை JM.7 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இந்த வழக்கு விசாரணை இன்று (ஜூன்.26) நடைபெற்ற நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மு.முத்துசாமி, தென்றல் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், குனியமுத்தூர் பகுதி செயலாளர் லோகநாதன், கூடலூர் நகரமன்ற தலைவர் அறிவரசு, கவுண்டம்பாளையம் முன்னாள் பகுதி செயலாளர் மதியழகன், வீரபாண்டி கார்த்தி, காங்கிரஸ் கட்சயைச் சார்ந்த குனிசை செல்வம், சி.பி.எம், நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த முகமதுஅலி உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது கழக மூத்த வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி மற்றும் கழக வழக்கறிஞர்கள் குழுவும் உடனிருந்தனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...