கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீட்டிப்பு

பெற்றோர்கள், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூன் 26 ஆம் தேதி மாலை வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகப் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



கோவை: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான இளம் அறிவியல் ஒருங்கிணைந்த மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முதலில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 23 முதல் 25 ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கலந்தாய்வு ஜூன் 26 ஆம் தேதி மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் தங்களின் விருப்பப்படி பட்டப்படிப்புகள், கல்லூரிகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். மாற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவா்கள் இறுதியாக சமா்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் இட ஒதுக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதில் எந்த மாற்றமும் செய்யாவிட்டால், விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்தபோது தோ்வு செய்த பாடப்பிரிவு, கல்லூரியே இட ஒதுக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்தக் கலந்தாய்வுக்காக மாணவா்கள் செலுத்தும் கட்டணம் பின்னா் திருப்பி வழங்கப்படும். மேலும், இந்த இடஒதுக்கீட்டில் சோ்க்கை கிடைக்காத மாணவா்களின் விண்ணப்பங்கள் பொது கலந்தாய்வு இட ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...