தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாள் – தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததானம் முகாமில் நிர்வாகிகள் ரத்தம் தானம் செய்தனர். இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களையும் அவர்கள் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் கவுண்டச்சி புதூர் தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் 50 பேர் ரத்தம் தானம் வழங்கினர்.

ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் சொர்க்கம் ரமேஷ், திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், திருப்பூர் இளைஞரணி தலைவர் ஷேக் பரித், நகரத் தலைவர் சார்லி விக்டர், நகர இளைஞரணி தலைவர் கதிர் தொழிலாளர் அணி தலைவர் ஹரிஹர சுதன், தொழிற்சங்க அணி ஸ்ரீகாந்த், தொண்டரணி பிரபு, மாணவரணி எழில் பிரபாகரன் உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் இரத்ததான முகாமில் ரத்தம் வழங்கினார்.



முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவர் கௌதம் முதல் முறையாக தளபதியின் பிறந்தநாள் அன்று ரத்தம் தானம் செய்வேன் என்று உறுதியற்றார். மேலும் தாராபுரம் நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு, இலவச கண் சிகிச்சை மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை நிர்வாகிகள் வழங்கினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...