தாராபுரத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக ஒன்றிய, நகர, பேரூர், கழக திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ.பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் தாராபுரம் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

தாராபுரம் நகர பகுதிக்கு வருகை தந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் தாராபுரம் நகர பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும், தந்தை பெரியாரின் திருஉருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அதன் பிறகு தாராபுரம் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் தாராபுரம் திமுக ஒன்றிய, நகர பேரூர் கழக திமுக நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.இ. பிரகாஷ் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் பேசியதாவது, கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 63 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மொடக்குறிச்சி தனது சொந்த சட்டமன்ற தொகுதியில் மற்ற வேட்பாளர்களை விட 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.



இதேபோன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் தான் நமது கூட்டணி உழைப்பாளர் கயல்விழி செல்வராஜ் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றாக உழைத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பொதுமக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவிகள் செய்வேன் எனவும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் நிதியிலிருந்து தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்வேன் எனவும் தெரிவித்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...