மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் கெமிக்கல் கலவையால் எழுந்த புகை - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

பிலிஷிங் பவுடர் மற்றுன் லைசால் மூலம் சுத்தம் செய்யப்பட்ட கழிவறையில் நோயாளி ஒருவர் தண்ணீர் ஊற்றியதன் விளைவாக கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டு அரசு மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.

தலைமை மருத்துவர் அருணா குமாரி விரைந்து செயல்பட்டு, தீயனைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உடனடியாக வரவழைத்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த சில நோயாளிகளை உடனடியாக வெளியேற்றி, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.



இதனிடையே தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்குள் நுழைந்து சிலிண்டர்கள் இருக்கும் பகுதியில் ஆய்வு செய்தனர். அதன் பின் கழிவறை பகுதியில் பார்த்த போது பிலிசிங் பவுடர், லைசால் இரண்டும் இருந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் வயிற்றுப் போக்கால் சில நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிக்கடி கழிவறைகளை தூய்மை பணியாளர் சுத்தம் செய்து வந்துள்ளார்.

இதை அறியாத நோயாளி ஒருவர் பிலிஷிங் பவுடர் மற்றுன் லைசால் மூலம் சுத்தம் செய்யப்பட்ட கழிவறையில் தண்ணீர் ஊற்றிய தன் விளைவாக கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டு புகை உருவாகி, மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...