கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய பேருந்துக்கு ரூ.2000 அபராதம்

கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் நின்ற ஹரிஹரசுதன் என்ற தனியார் பேருந்துக்கு போக்குவரத்து போலீசார் ரூ.2000 அபராதம் விதித்தனர். அபராதத்தை கட்டியப்பிறகு பேருந்தை ஓட்டுநர் எடுத்துச் சென்றார்.


கோவை: கோவை ரயில் நிலையம் சாலை மிகவும் பிரதான சாலை. அப்பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். அதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் அருகே கணுவாய், சோமனூர் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே போதிய பேருந்து நிறுத்த வசதி இல்லாததால் பேருந்துகள் சாலையில் நிறுத்தப்படுவது வழக்கம். ஒரு சில பேருந்துகள் சாலை விதிகளை மீறி நிறுத்துவதால் ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே நகர பேருந்துகள் அனைத்தும் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு உடனடியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் ஹரிஹரசுதன் என்ற தனியார் பயணிகள் பெருந்தான 11 ஆம் நம்பர் வண்டி கணுவாய் ரயில் நிலையம் செல்கிறது.



இந்த பேருந்து இன்று ஜூன்.20 கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியதால் போக்குவரத்து போலீசார் வாகனத்தின் முன் பக்க சக்கரத்தில் பூட்டு போட்டு பின்னர், 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். உடனடியாக நடத்துனர் 2000 ரூபாயை கட்டி விட்டு வாகனத்தை எடுத்துச் சென்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...