கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய பேருந்துக்கு ரூ.2000 அபராதம்

கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் நின்ற ஹரிஹரசுதன் என்ற தனியார் பேருந்துக்கு போக்குவரத்து போலீசார் ரூ.2000 அபராதம் விதித்தனர். அபராதத்தை கட்டியப்பிறகு பேருந்தை ஓட்டுநர் எடுத்துச் சென்றார்.


கோவை: கோவை ரயில் நிலையம் சாலை மிகவும் பிரதான சாலை. அப்பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். அதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் அருகே கணுவாய், சோமனூர் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே போதிய பேருந்து நிறுத்த வசதி இல்லாததால் பேருந்துகள் சாலையில் நிறுத்தப்படுவது வழக்கம். ஒரு சில பேருந்துகள் சாலை விதிகளை மீறி நிறுத்துவதால் ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே நகர பேருந்துகள் அனைத்தும் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு உடனடியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் ஹரிஹரசுதன் என்ற தனியார் பயணிகள் பெருந்தான 11 ஆம் நம்பர் வண்டி கணுவாய் ரயில் நிலையம் செல்கிறது.



இந்த பேருந்து இன்று ஜூன்.20 கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியதால் போக்குவரத்து போலீசார் வாகனத்தின் முன் பக்க சக்கரத்தில் பூட்டு போட்டு பின்னர், 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். உடனடியாக நடத்துனர் 2000 ரூபாயை கட்டி விட்டு வாகனத்தை எடுத்துச் சென்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...