பல்லடம் அருகே சின்னக்காளிபாளையத்தில் முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு சீல்

சின்னக்காளிபாளையத்தில் முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். டாக்டர் மெர்சல் மகேஷ் ஆண்டனி, லிட்டில் ப்ளோரா, மெடிக்கலில் வேலை பார்த்து வந்த நளினி ஆகியோர் வருகிற 21ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்காளிபாளையத்தில் முறைகேடாக கிளினிக் மற்றும் மருந்தகங்கள் செயல்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி, பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபால கிருஷ்ணன் மற்றும் இளநிலை உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், திருப்பூர் இடுவாய், சின்னக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள கிளினிக் மற்றும் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் இருந்த கிளினிக்கில் டாக்டர் மார்சல் முகேஷ் ஆண்டனி எம்.பி.பி.எஸ். என்ற மருத்துவரின் பெயர் பலகையில் இருந்தது. ஆனால் அங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய கல்வி தகுதி இல்லாத அதே இடத்தில் இருந்த மருந்தக உரிமையாளர் லிட்டில் ப்ளோரா என்பவர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.



இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கேட்டனர். அப்போது லிட்டில் ப்ளோரா என்பவர் தான் சிகிச்சை அளித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், டாக்டர் மார்சல் முகேஷ் ஆண்டனி என்பவரை தொடர்பு கொண்ட போது தான் அங்கு வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக டாக்டர் மெர்சல் மகேஷ் ஆண்டனி, லிட்டில் ப்ளோரா, மெடிக்கலில் வேலை பார்த்து வந்த நளினி ஆகியோரை வருகிற 21-ம் தேதி தகுந்த ஆதாரங்களுடன் இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...