பல்லடம் அருகே இடுவாய் பகுதியில் மளிகை கடையில் திருட்டு – காவல்துறை விசாரணை

இடுவாய் பகுதியில் உள்ள வஞ்சிபாளையம் பிரிவில் ராஜா என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் பகுதியில் உள்ள வஞ்சிபாளையம் பிரிவில் தனியார் மளிகை கடை ஒன்றில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

வழக்கம் போல 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு ராஜா சென்ற நிலையில், நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.



உள்ளே சென்று பார்த்தப்போது, கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை யினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் சுமார் ரூ.30,000பணம் திருடு போனது விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...