கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் பசுமையான சூழல் ஏற்படுத்தும் வகையில் குப்பை கிடங்கு எல்லை பகுதியில் சுமார் 9.4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வேம்பு, பூவரசன், புங்கன், நாவல் உள்ளிட்ட 14 வகையான மரங்கள் என 2000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வெள்ளலூர் குப்பைகிடங்கு வளாகத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் சுமார் 2000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் பசுமையான சூழல் ஏற்படுத்தும் வகையில் குப்பை கிடங்கு எல்லை பகுதியில் சுமார் 9.4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட 14 வகையான மரங்கள் என 2000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.

மேலும், மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மேயர், தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து, நல்ல முறையில் பராமரித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், தெற்கு மண்டல குழுத்தலைவர் ர.தனலட்சுமி, ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம் பாஷா, உதயகுமார், குணசேகரன், அப்துல்காதர், பாபு, வசந்தா, சரளா, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...