மூலனூர் அருகே அதிகாலையில் குடி போதையில் காற்றாலை தொழிலாளர்கள் இடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு

அதிகாலையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காற்றாலை தொழிலாளி மாரிசெல்வம் என்பவர் கீழே தள்ளி தாக்கியதில் மற்றொரு தொழிலாளியான சந்தோஷ் குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். மாரிசெல்வத்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளாம்பூண்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி பிரிவு பாலகுமார் நகரில் தனியாருக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இது கடந்த நான்கு வருடங்களாகவே பயன்பாட்டில் இல்லாததால் பாலிடெக்னிக் கல்லூரியில், தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 11பேர் கடந்த இரண்டு வாரங்களாக அங்கு தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்த நபர்கள் மது அருந்தி உள்ளனர். அப்போது திருச்சி ஸ்ரீரங்கம் கண்டி வீதி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (21) மற்றும் விருதுநகர் பழையபாளையம் மாடசாமி கோவில் வீதியைச் சேர்ந்த மாரிசெல்வம் (28) என்பவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.



பின்னர் மது போதையில் சந்தோஷ் குமார், மாரி செல்வத்தை மரியாதை குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த மாரிசெல்வம், சந்தோஷ் குமாரை கீழே தள்ளி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் சந்தோஷ் குமாரை கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.



அங்கு சந்தோஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 2மணி அளவில் மூலனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இறந்து போன சந்தோஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து மூலனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாரிசெல்வம் என்பவரை மூலனூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...