கோவையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள்


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.70-க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலை, சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், இன்று (18.06.2024) கோயம்புத்தூர் மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மைப்பணிகளுக்கு ரூ.63.44 இலட்சம் மதிப்பீட்டில், 15726 எண்ணிக்கையிலான தளவாட பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன்முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார்தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக சுமார் 2220 நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் தூய்மைப்பணியாளர்கள், பொதுசுகாதாரப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.63.44 இலட்சம் மதிப்பீட்டில், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு தேவைப்படும் தளவாட பொருட்களின் தொகுப்பாக கைசீமாறு 3195, ஜல்லை சீமாறு 2050, முறம் 985, 2 பள்ளு கொத்து 740, 4 பள்ளு கொத்து 560, மண்வெட்டி 754, மூங்கில் கூடை பெரியது 1210, மூங்கில் கூடை சிறியது 1180, சாக்கடை பலகை 760, பிளாஸ்டிக் சட்டி 1952, ரோடு கூட்டும் பிரஸ் 1000, வீச்சு 400, அருவாள் 605 மற்றும் கடப்பாறை 335 என மொத்தம் 15726 எண்ணிக்கைகளான பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மேயர், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.



உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், தெற்கு மண்டல குழுத்தலைவர் ர.தனலட்சுமி, பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஷர்மிளா, ரேவதி முரளி, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதா ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...