கோவையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள்


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.70-க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலை, சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், இன்று (18.06.2024) கோயம்புத்தூர் மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மைப்பணிகளுக்கு ரூ.63.44 இலட்சம் மதிப்பீட்டில், 15726 எண்ணிக்கையிலான தளவாட பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன்முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார்தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக சுமார் 2220 நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் தூய்மைப்பணியாளர்கள், பொதுசுகாதாரப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.63.44 இலட்சம் மதிப்பீட்டில், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு தேவைப்படும் தளவாட பொருட்களின் தொகுப்பாக கைசீமாறு 3195, ஜல்லை சீமாறு 2050, முறம் 985, 2 பள்ளு கொத்து 740, 4 பள்ளு கொத்து 560, மண்வெட்டி 754, மூங்கில் கூடை பெரியது 1210, மூங்கில் கூடை சிறியது 1180, சாக்கடை பலகை 760, பிளாஸ்டிக் சட்டி 1952, ரோடு கூட்டும் பிரஸ் 1000, வீச்சு 400, அருவாள் 605 மற்றும் கடப்பாறை 335 என மொத்தம் 15726 எண்ணிக்கைகளான பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மேயர், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.



உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், தெற்கு மண்டல குழுத்தலைவர் ர.தனலட்சுமி, பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஷர்மிளா, ரேவதி முரளி, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதா ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...