கவுன்சிலர் வார்டு பகுதிக்குள் வருவதே இல்லை! கோவையில் 19 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் கொந்தளிப்பில் மக்கள்!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வேலாண்டிபாளையம் பகுதியில் 19 நாட்களாக குடிநீர் வராமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொதுமக்கள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 43 வது வார்டு வேலாண்டிபாளையம் கொண்டசாமி நாயுடு வீதி உள்ளிட்ட ஏராளமான சாலைகளை உள்ளடக்கியது. இங்குள்ள இரண்டாவது வீதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இந்த பகுதியில் ஆறு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்து கொண்டிருந்தது. தற்போது சூயஸ் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த பகுதியில் பழைய பைப்புகள் அகற்றப்பட்டு புதிய பைப்புகள் போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு மேலாக குடிநீர் வழங்குவதில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனத்துடன் செயல்பட்டு வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை எனவும், இதனால் சாக்கடைகளில் மண் தேங்கி மழைக்காலங்களில் குடியிருப்புகளுக்குள் சாக்கடை நீர் பெருக்கெடுப்பது வாடிக்கையாக மாறி உள்ளது.



இந்த நிலையில், கடந்த 19 நாட்களாக இந்த பகுதியில் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக வார்டு கவுன்சிலர் மல்லிகா புருஷோத்தமனை தொடர்பு கொண்டு கேட்டால், அவர் உரிய பதில் அளிப்பதில்லை எனவும், அவருக்கு பதிலாக அவரது கணவர் புருஷோத்தமன் மட்டுமே வந்து பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை கேட்டுவிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இந்நிலையில், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொதுமக்கள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே, பொதுமக்கள் போராட்டம் நடத்த இருப்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து குடிநீர் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து குடிநீர் பிரச்சினை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...