பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் சாலையில் கவிழ்ந்த முட்டை வேன் - ரூ.2 லட்சம் மதிப்பிலான முட்டை சேதம்

கள்ளகிணறு என்ற பகுதியில் அரசுப்பேருந்தை முந்திச் செல்ல முயன்ற வேன், சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் வேனில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதமடைந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாராபுரம் சாலையில் உள்ள கள்ளகிணறு என்ற பகுதியில் பல்லடத்தை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த முட்டை வேன், அரசு பேருந்து வாகனத்தை முந்தும் போது விபத்து ஏற்பட்டு நடுரோட்டில் முட்டை வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் சேதம் அடைந்தன.

அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் மற்றும் அரசு பேருந்தில் வந்த பயணிகள் உயிர் தப்பினர்.



ராஜபாளையத்திலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, அதன் முன்னால் தாராபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கேட்சரிஸ் வேன் ஒன்றன்பின் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து இந்த வேனை முந்த முயற்சித்துள்ளது.



அப்போது வேனின் ஓட்டுநர் கட் அடித்ததாகவும் இதனால் நடுரோட்டில் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பல்லடம் போலீசார் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வாகனத்தை மீட்டனர்.



இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...