பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளில் உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், பக்ரீத் பண்டிகை நாளான இன்று ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் இருந்து வனப் பகுதியில் அமைந்துள்ளது பஞ்சலிங்க அருவி. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, ஜல்லிமுத்தன் பாறை போன்ற பகுதிகளில் கன மழை பெய்த காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்த காரணத்தால் அருவிப்பகுதியில் குறைந்த அளவு சீரான முறையில் தண்ணீர் வரத்து காணப்பட்டதால் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கபட்டது.



இந்த நிலையில் இன்று பக்ரீத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...