பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளில் உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், பக்ரீத் பண்டிகை நாளான இன்று ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் இருந்து வனப் பகுதியில் அமைந்துள்ளது பஞ்சலிங்க அருவி. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, ஜல்லிமுத்தன் பாறை போன்ற பகுதிகளில் கன மழை பெய்த காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்த காரணத்தால் அருவிப்பகுதியில் குறைந்த அளவு சீரான முறையில் தண்ணீர் வரத்து காணப்பட்டதால் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கபட்டது.



இந்த நிலையில் இன்று பக்ரீத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...