உடுமலையில் விவசாயிடம் நிலம் வாங்கி ரூ.4 கோடி மோசடி செய்த நபர் தலைமறைவு - காவல்துறை தேடல்

ஆண்டிய கவுண்டனூர் கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 41 ஏக்கர் நிலத்தை ரூ. 4 கோடிக்கு வாங்கி விட்டு, பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்து வந்த விஜயகுமார் என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மானுபட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு ஆண்டிய கவுண்டனூர் கிராமத்தில் 41 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ராதாகிருஷ்ணனின் 41 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.4 கோடியே 10 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதாக தெரிகிறது.

பணத்தை வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்வதாக விஜயகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் பரிவர்த்தனை செய்யாமல் ஏமாற்றி உள்ளார். அதன் பிறகு தொடர்ந்து கேட்ட பிறகு 37 லட்சத்து 25 ஆயிரம் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசீல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...