கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரத்த தானம் முகாம்

இரத்த தானம் முகாமில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர், கொடையாளர்கள், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 104 பேர் இரத்த தானம் செய்தனர்.



கோவை: உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று ஜூன்.14 இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை உடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இந்த முகாமை துவக்கி வைத்தார்.

சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையின் முதன்மையர் ரவீந்திரன், இதில் தலைமை வகித்தார். இஎஸ்ஐ ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் டாக்டர் உமாசரோஜினி தனது குழுவினருடன் முகாமை நடத்தினார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர். கொடையாளர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 104 பேர் இரத்த தானம் செய்தனர்.



முகாம் துவங்குவதற்கு முன்பாக வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டத்தின் 200 மாணவர்கள் இரத்த தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பல்கலைக்கழகத்தின் மாணவர் நலத்துறை முதன்மையர் முனைவர் மரகதம் பேரணியை துவக்கி வைத்தார்.

நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலுவலர்களும் ஒருங்கிணைப்பாளரும் கலந்து கொண்டனர். பேரணியில் மாணவ, மாணவியர் இரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்களை பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...