கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு

கோவை வெள்ளியங்கிரி கோவில் அன்னதான அறையில் காட்டு யானை புகுந்த சம்பவம் நேற்று நடந்தது. வாழைப்பழங்கள் வீசி யானையை வெளியேற்றியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. அடர் வனப்பகுதி என்பதால் அவ்வப்போது உணவு தேடி காட்டு யானைகள் அங்குள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். 

இந்நிலையில் நேற்றைய தினம் ஜூன்.13 ஒற்றை காட்டு யானை வெள்ளியங்கிரி கோவிலுக்கு உட்பட்ட அன்னதான உணவு பொருட்கள் வைக்கக்கூடி கூடத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 



இதனை அடுத்து நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு வாழைப்பழங்களை வீசி காட்டு யானையை அன்னதான கூடத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். 

மேலும் வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவும் யானை போன்ற காட்டு மிருகங்கள் கண்ணில் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...