பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்

பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டன. அதனை வாங்குவதற்காக கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று ஜூன்.13 காலை முதலே சந்தை களைக்கட்டி இருந்தது.


கோவை: தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் உள்ள மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்களில் இந்த மாட்டு சந்தை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமைகளில் ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.

இந்த சந்தைக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களாக சந்தை நாட்களில் 2 கோடி ரூபாய் அளவிற்கே வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வருகிற 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி பொள்ளாச்சி மாட்டு சந்தை களைக்கட்டி இருந்தது. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர். இதனால் இன்று ஜூன்.13 காலை முதலே சந்தை களை கட்டி இருந்தது.

இதனால் கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர். மாடுகள் வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர். மேலும் மாடுகள் வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. ஆண்டுதோறும் அதிகளவில் மாடுகள் விற்பனை நடைபெறும் சந்தையாக பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...