திருப்பூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு - 45,885 பேர் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில் 45,885 பேர் பங்கேற்பு. 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது, கண்காணிப்பு மற்றும் அதிகாரிகள் மொபைல் டீம், பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 மூலம், தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் தேர்வு நடக்கிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தொகுதி 4 தேர்வை, 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் 45 மொபைல் டீம் மற்றும் 18 பறக்கும் படையினர், 155 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



காலை 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது என்பதால், தேர்வாளர்கள் 8 மணி முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். அனுமதிப்பதற்கு முன்பாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச், பர்ஸ் ஆகியவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட் உடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்த பின்னரே தேர்வு மையத்திற்கு பட்டனர். ஒன்பது 30 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. ஐந்து நிமிட இடைவெளிக்கு பிறகு தேர்வாளர்கள் தேர்வு எழுத துவங்கினர்.



தேர்வுமைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அனைத்து தேர்வு மையங்களும் வீடியோ கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...