கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதானவரின் சொத்துக்கள் பறிமுதல்

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பின் நிர்வாகி சுபைர், கடந்த 2012-ம் ஆண்டு தனது பெயரில் வாங்கிய சொத்துகளை கடந்த 2020-ம் ஆண்டு தானமாக அவரது தாயாரின் பெயருக்கு மாற்றினார். என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு உத்தரவின் பேரில் சுபைரின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று ஜூன்.7 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் சசிக்குமார். இவர் துடியலூர் அருகே கடந்த (22.09.2016) அன்று ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. என்ற பாப்புலர்பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுபைர், முபாரக், ரபியுல் ஹாசன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு 2018-ம் ஆண்டு என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து பூந்தமல்லி கோர்ட்டில் என.ஐ.ஏ. சார்பில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2022 முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் பி.எப்.ஐ. அமைப்பின் நிர்வாகியான சுபைர் கடந்த 2012-ம் ஆண்டு தனது பெயரில் வாங்கிய சொத்துகளை கடந்த 2020-ம் ஆண்டு தானமாக தனது தாயாரின் பெயருக்கு மாற்றி உள்ளது தெரியவந்தது.

குற்றச்செயல் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த சொத்து மாற்றம் நடந்ததால், சுபைருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை முறியடிக்கும் முயற்சியாக என்.ஐ.ஏ.வால் பார்க்கப்பட்டது. 2023-ம் ஆண்டில் யு.ஏ.(பி) சட்டத்தின் 33-ன் கீழ் கூறப்பட்ட சொத்தை இணைத்து பறிமுதல் செய்ய உத்தரவிடக்கோரி என்.ஐ.ஏ. சார்பில் சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு உத்தரவின் பேரில் சுபைரின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு இந்த வழக்குடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...