கோவை மருதமலை வனப்பகுதியில் குட்டி யானையை சேர்க்க மறுத்த தாய் யானை - வனத்துறையினரின் முயற்சி தோல்வி

உடல்நலம் தேறிய யானை, அதன் குட்டியை சேர்க்க மறுத்திவிட்டது. இதனையடுத்து, தாளியூர், யானை மடுவு வனப்பகுதியில், 2 குட்டிகளுடன் உள்ள மற்றொரு தாய் யானையுடன் இந்த குட்டியானை சேர்க்க வனத்துறையினர் இன்று ஜீப்பில் அழைத்து சென்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30-ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உடல்நிலை சரியில்லாமல், அசையாத நிலையில் இருந்ததை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் அருகே 4 வயது குட்டியானை நிற்பதையும் கண்டனர்.



பின் ஊழியர்கள், கால்நடை மருத்துவர்களுடன் சேர்ந்து, தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

அதன் குட்டிக்கு பாலூட்ட முடியாததால் உணவளித்தனர். ஏறக்குறைய 3 நாட்கள், குட்டி தனது தாயின் பக்கத்தில் நின்றது. ஆனால் தாய் குணமடைவதற்குள், குட்டி யானை காட்டுக்குள் சென்று ஒரு கூட்டத்துடன் சென்றது. இந்த நிலையில் சிகிச்சைக்கு நன்கு பதிலளித்த தாய் யானை குணமடைந்து ஜூன்.3 ஆம் தேதி காட்டுக்குள் விடப்பட்டது.

இந்த நிலையில் குட்டி யானை தனியார் பண்ணையில் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பின் தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு, கோவை அட்டுக்கல் பகுதியில், குட்டி யானையை அதன் தாய் யானையுடன் இன்று சேர்க்க முயன்றனர்.

ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. இவ்வாறு 3 நாட்களாக குட்டி யானையை அதன் தாய் யானையுடன் இணைக்க முயன்றும், அது தோல்வியடைந்தது. தாய் யானை தனது குட்டியை உரிமை கொண்டாட மறுத்தது.



இதனையடுத்து, தாளியூர், யானை மடுவு வனப்பகுதியில், 2 குட்டிகளுடன் உள்ள மற்றொரு தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் இன்று ஜூன்.7 இந்த குட்டி யானையை மகேந்திரா ஜீப்பில் அழைத்து சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...