கோவை மருதமலை வனப்பகுதியில் குட்டி யானையை சேர்க்க மறுத்த தாய் யானை - வனத்துறையினரின் முயற்சி தோல்வி

உடல்நலம் தேறிய யானை, அதன் குட்டியை சேர்க்க மறுத்திவிட்டது. இதனையடுத்து, தாளியூர், யானை மடுவு வனப்பகுதியில், 2 குட்டிகளுடன் உள்ள மற்றொரு தாய் யானையுடன் இந்த குட்டியானை சேர்க்க வனத்துறையினர் இன்று ஜீப்பில் அழைத்து சென்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30-ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உடல்நிலை சரியில்லாமல், அசையாத நிலையில் இருந்ததை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் அருகே 4 வயது குட்டியானை நிற்பதையும் கண்டனர்.



பின் ஊழியர்கள், கால்நடை மருத்துவர்களுடன் சேர்ந்து, தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

அதன் குட்டிக்கு பாலூட்ட முடியாததால் உணவளித்தனர். ஏறக்குறைய 3 நாட்கள், குட்டி தனது தாயின் பக்கத்தில் நின்றது. ஆனால் தாய் குணமடைவதற்குள், குட்டி யானை காட்டுக்குள் சென்று ஒரு கூட்டத்துடன் சென்றது. இந்த நிலையில் சிகிச்சைக்கு நன்கு பதிலளித்த தாய் யானை குணமடைந்து ஜூன்.3 ஆம் தேதி காட்டுக்குள் விடப்பட்டது.

இந்த நிலையில் குட்டி யானை தனியார் பண்ணையில் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பின் தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு, கோவை அட்டுக்கல் பகுதியில், குட்டி யானையை அதன் தாய் யானையுடன் இன்று சேர்க்க முயன்றனர்.

ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. இவ்வாறு 3 நாட்களாக குட்டி யானையை அதன் தாய் யானையுடன் இணைக்க முயன்றும், அது தோல்வியடைந்தது. தாய் யானை தனது குட்டியை உரிமை கொண்டாட மறுத்தது.



இதனையடுத்து, தாளியூர், யானை மடுவு வனப்பகுதியில், 2 குட்டிகளுடன் உள்ள மற்றொரு தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் இன்று ஜூன்.7 இந்த குட்டி யானையை மகேந்திரா ஜீப்பில் அழைத்து சென்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...