பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை

வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்கள், சத்துணவு கூடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகள் குறித்தும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் அறிவுரை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் கலையரங்கம் கூட்டரங்கில், பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான மாநகராட்சிக்கு உட்பட்ட 83 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 37 நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் தலைமையில் இன்று (07.06.2024) நடைபெற்றது.

தமிழகத்தில் வருகின்ற 10.06.2024 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் புனரமைத்தல் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இக்கூட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பள்ளி வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்கள், சத்துணவு கூடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகள் குறித்தும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் அறிவுரை வழங்கினார்.

மேலும், பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் பள்ளிகளின் தேவைகள் குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், பள்ளி மேற்பார்வையாளர்கள், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...