வாலாங்குளம் ஜங்சன் அருகே பைனாஸ் நிறுவன ஊழியரிடம் முகவரி கேட்பது போல் நடித்து பணம் பறித்த நபர் கைது

உக்கடம் வாலாங்குளம் ஜங்சன் அருகே பைக் ரிப்பேர் ஆகி நின்றுக்கொண்டிருந்த வைரவமூர்த்தி என்பவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து கத்திமுனையில் ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற தெலுங்குபாளையம் சொக்கம்புதூரை சேர்ந்த தர்மராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையை அடுத்த பழையூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வைரவமூர்த்தி (37). இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஜூன்.6 பைக்கில் தனது நண்பர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் உக்கடம் வாலாங்குளம் ஜங்சன் அருகே சென்றபோது, பைக் ரிப்பேர் ஆனது. உடனே வைரவமூர்த்தியின் நண்பர் மெக்கானிக்கை அழைத்து வர சென்றார்.

அப்போது தனியாக நின்றிருந்த வைரவமூர்த்தியிடம் அங்கு வந்த வாலிபர் ஒருவர் குனியமுத்தூருக்கு எப்படி செல்ல வேண்டும் என முகவரி கேட்டுக்கொண்டே அருகே வந்த அவர் திடீரென கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த 1000 ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

பின்னர் இது குறித்து வைரவமூர்த்தி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், பணம் பறித்தது தெலுங்குபாளையம் சொக்கம்புதூரை சேர்ந்த தர்மராஜ்(30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...