உடுமலை அருகே கொடுங்கியம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பொன்னர் சங்கர் கிராமிய கதைப்பாடல் நிகழ்ச்சி

கொடுங்கியம் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பொன்னர் சங்கர் கிராமிய கதை பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுங்கியம் கிராமத்தில் பொன்னர் சங்கர் கிராமிய கதை பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம், குன்னுடையாசாமி-தாமரை அரியநாச்சி பிறப்பு, தாமரை அரியநாச்சி பூப்பு நன்னீர் ஆண்டு விழா, செல்லாண்டியம்மன் தேரோட்டம், தாமரை தவசு, தாமரை வளைகாப்பு, பொன்னர் சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



அதைத் தொடர்ந்து நேற்றிரவு இரவு அருள்மிகு பொன்னர் சங்கர், ஸ்ரீ பச்சாயி, ஸ்ரீ பவளாயி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தின் தொடக்கமாக மாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கணபதி பூஜை, சுயம்வரா பார்வதி ஹோமமும் திருக்கல்யாணமும் நடைபெற்றது.



கதைப்பாடல் வழியாக இந்த திருக்கல்யாண வைபவத்தை உடுமலை சீதாராமன் மற்றும் சிவா குழுவினர் தத்ரூபமாக நடத்தினர்.

தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...