உடுமலை அருகே கொடுங்கியம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பொன்னர் சங்கர் கிராமிய கதைப்பாடல் நிகழ்ச்சி

கொடுங்கியம் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பொன்னர் சங்கர் கிராமிய கதை பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுங்கியம் கிராமத்தில் பொன்னர் சங்கர் கிராமிய கதை பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம், குன்னுடையாசாமி-தாமரை அரியநாச்சி பிறப்பு, தாமரை அரியநாச்சி பூப்பு நன்னீர் ஆண்டு விழா, செல்லாண்டியம்மன் தேரோட்டம், தாமரை தவசு, தாமரை வளைகாப்பு, பொன்னர் சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



அதைத் தொடர்ந்து நேற்றிரவு இரவு அருள்மிகு பொன்னர் சங்கர், ஸ்ரீ பச்சாயி, ஸ்ரீ பவளாயி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தின் தொடக்கமாக மாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கணபதி பூஜை, சுயம்வரா பார்வதி ஹோமமும் திருக்கல்யாணமும் நடைபெற்றது.



கதைப்பாடல் வழியாக இந்த திருக்கல்யாண வைபவத்தை உடுமலை சீதாராமன் மற்றும் சிவா குழுவினர் தத்ரூபமாக நடத்தினர்.

தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...