கோவையில் மீண்டும் தாய் யானையுடன் இணைந்த குட்டிச் சுட்டி யானை..!

தாய் யானையை சந்தித்து மீண்டும் 2 மணி நேரத்திற்கு பிறகு தான் ஏற்கனவே வந்த கூட்டத்துடன் சென்றது. வனத்துறை களப் பணியாளர்கள் 4 குழுக்களாக பிரித்து கண்காணித்து வருகின்றனர்.


Coimbatore: கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுக்கு உட்பட்ட அடிவார சரக பகுதியில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய பெண் யானை நலமுடன் சுறுசுறுப்பாகவும் உணவருந்தி வருகிறது. 3 நாட்களாக உடன் இருந்த குட்டி ஆண் யானை நேற்று (01-06-2024) அதிகாலை தாயை விட்டு, பிரிந்து தனது சகோதர குட்டி யானையுடன் சென்றது. 

இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் அதன் கூட்டத்துடன் இணைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் குட்டி யானை அடங்கிய யானை கூட்டம் (3 ஆண் யானை 2 பெண் யானை 1 ஐந்து வயது யானை மற்றும் ஒரு குட்டி) தாயை சந்தித்து மீண்டும் 2 மணி நேரத்திற்கு பிறகு தான் ஏற்கனவே வந்த கூட்டத்துடன் சென்றது. வனத்துறை களப் பணியாளர்கள் 4 குழுக்களாக பிரித்து கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...