கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில் திமுக நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம்

ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையின்போது, தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், இன்று ஜூன்.1 கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மாவட்டச் செயலாளர்கள், திமுக கழக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம், கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, ஜூன்- 4 அன்று நடைபெற உள்ள, வாக்கு எண்ணிக்கையின்போது, தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.



இக்கூட்டத்தில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, திமுக கழக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் குமார், தலைமை முகவர், கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு ‌‌உட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சூலூர் சட்டமன்றத் தொகுதி, பல்லடம் சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...