கோவை மருதமலை அருகே குட்டி யானை மாயம் - தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

மருதமலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் யானையில் அருகில் இருந்த குட்டியானை நேற்றிரவு மாயமாகியுள்ளது. அந்த குட்டியானை எங்கு சென்றுள்ளது என்று வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மருதமலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மூன்றாவது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணாமல்போனதால் தேடும் பணியில் வனத்துறை ஈடுப்பட்டுள்ளனர்.

அதன்படி கோவை மருதமலை வனப் பகுதியில் உடல் நலக் குறைவால் கண்டறியப்பட்ட பெண் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினரும், வனத் துறையினரும் சிகிச்சை அளித்து வருகின்றனர். கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாய் யானையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து தானாக உணவு உட்கொள்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சையின் போது குட்டி யானையுடன் சுற்றித் திரிந்த மற்றொரு குட்டி யானை அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், நேற்று இரவு அந்த குட்டி யானையுடன் இந்த ஆண் குட்டி யானை சென்று இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் அதனை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் இன்று ஜூன்.1 தகவல் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...