கோவை மருதமலை அருகே குட்டி யானை மாயம் - தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

மருதமலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் யானையில் அருகில் இருந்த குட்டியானை நேற்றிரவு மாயமாகியுள்ளது. அந்த குட்டியானை எங்கு சென்றுள்ளது என்று வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மருதமலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மூன்றாவது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணாமல்போனதால் தேடும் பணியில் வனத்துறை ஈடுப்பட்டுள்ளனர்.

அதன்படி கோவை மருதமலை வனப் பகுதியில் உடல் நலக் குறைவால் கண்டறியப்பட்ட பெண் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினரும், வனத் துறையினரும் சிகிச்சை அளித்து வருகின்றனர். கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாய் யானையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து தானாக உணவு உட்கொள்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சையின் போது குட்டி யானையுடன் சுற்றித் திரிந்த மற்றொரு குட்டி யானை அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், நேற்று இரவு அந்த குட்டி யானையுடன் இந்த ஆண் குட்டி யானை சென்று இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் அதனை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் இன்று ஜூன்.1 தகவல் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...