கோவை காந்திபுரம் சிக்னலில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

18 வயது ஆகாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தரக்கூடாது. ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு வாகனம் வாங்கி தர வேண்டும். இல்லை என்றால் பெற்றோர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை காந்திபுரம் சிக்னலில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் சைபர் கிரைம் குறித்து இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவை மாநகர் ஆணையர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை ஆணையர் ரோஹித் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேஜிக் ஷோ நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



முகத்தில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தலைக்கவசம் அணிந்து மேஜிசியன் தயா வாகனத்தை ஓட்டி தலைக்கவசம் அணிவது கட்டாயம், மது அருந்தி வாகனத்தை ஓட்டக்கூடாது என்று காந்திபுரத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை விழிப்புணர்வு செய்தார்.



அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கண்ணைக் கட்டிக் கொண்டு கூட வாகனம் ஓட்டலாம், ஆனால் ஹெல்மெட் அணியாமல், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஒட்டக்கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டினால் நமது உயிர் நமது கையில் இல்லை என்று கூறினார்.

தற்போது இளைஞர்கள் அதிக அளவில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டு வருகிறார்கள். 18 வயது ஆகாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தரக்கூடாது. ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு வாகனம் வாங்கி தர வேண்டும், இல்லை என்றால் பெற்றோர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

கோவை மாநகரில் சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறுபவர்கள் மீது வாகனத்தை இயக்க முடியாத அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்னென்ன என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறினார்.

தனியார் கேஎம்சிஎச் மருத்துவமனையில் திருட முயற்சித்ததாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் போது அந்த பகுதியில் வந்தவர்கள் தொடர்புடையவர்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருகிறோம். நேரடியாக வாகன தணிக்கையின் போது போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா? என்ற கோணத்திலும் சோதனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...