கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர் மறைவிற்கு சக பத்திரிக்கையாளர்கள் அஞ்சலி

தினமணி பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த அஜய் ஜோசப் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு சக பத்திரிக்கையாளர்களும், புகைப்பட கலைஞர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோவையில் தினமணி பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தவர் அஜய் ஜோசப். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி பகுதியில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானார். அந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் நேற்று மே.29 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் இன்று மே.30 அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அஜய் வேலையின் போது எவ்வாறு துறுதுறுப்புடன் இருப்பார், அவரது எளிமையான பழக்க வழக்கங்கள், நட்பு ரீதியான விஷயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் அனைவரும் வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டுமென மூத்த பத்திரிக்கையாளர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...