கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர் மறைவிற்கு சக பத்திரிக்கையாளர்கள் அஞ்சலி

தினமணி பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த அஜய் ஜோசப் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு சக பத்திரிக்கையாளர்களும், புகைப்பட கலைஞர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோவையில் தினமணி பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தவர் அஜய் ஜோசப். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி பகுதியில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானார். அந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் நேற்று மே.29 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் இன்று மே.30 அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அஜய் வேலையின் போது எவ்வாறு துறுதுறுப்புடன் இருப்பார், அவரது எளிமையான பழக்க வழக்கங்கள், நட்பு ரீதியான விஷயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் அனைவரும் வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டுமென மூத்த பத்திரிக்கையாளர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...