கோவை KMCH மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் - சுகாதாரத்துறையிடம் ரகுநாத் என்பவர் மனு..!

கேஎம்சிஎச் மருத்துவமனையை மூடி, மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய் வேண்டும் என்று கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரகுநாத் என்பவர் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவையில் உள்ள கேஎம்சிஎச் என்ற தனியார் மருத்துவமனையில், ராஜா என்பவர் மருத்துவமனை ஊழியர்களாலும், காவலர்களாலும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கில் மருத்துவமனை காவலர், நிர்வாகிகள் என 8 பேர் கைது செய்யப்பட்டு, நேற்று மே.29 கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அரசு சார்ந்த மருத்துவத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மருத்துவமனை விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், மேலும் மருத்துவமனையை மூட வேண்டுமெனவும் வலியுறுத்தி கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரகுநாத் என்பவர் இன்று மே.30 மனு அளித்துள்ளார்.

இது குறித்து மனுதாரர் ரகுநாத் கூறுகையில், உயிரை காப்பாற்ற கூடிய இடத்தில் இருக்கும் மருத்துவமனையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்சம்பவத்தில் மருத்துவத்துறை சார்ந்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய அவர், துறை சார்ந்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்வது மட்டுமல்லாமல் அந்த மருத்துவமனையை மூட வேண்டும் என்று தெரிவித்த அவர், இது போன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவு என்றார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...