கோவை மாவட்ட ஆயதப்படை அலுவலகத்தில் காவலர் குறைதீர்க்கும் முகாம்

மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மனுக்களின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


கோவை: தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அந்த மனுக்கள் மீதான மறுவிசாரணை ஒவ்வொருவாரமும் புதன்கிழமை அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன்படி காவலர் குறைதீர்க்கும் முகாம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைானத்தில் உள்ள மாவட்ட ஆயதப்படை அலுவலகத்தில் நேற்று மே.29 நடைபெற்றது.



இதில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மனுக்களின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.



இந்த முகாமில் குடும்பபிரச்சினை, பணப்பரிமாற்ற பிரச்சினை, இடப்பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக 79 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் 1 மனு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. 2 மனுக்களுக்கு சி.எஸ்.ஆர். எனப்படும் புகார் ஏற்பு மனு வழங்கப்பட்டது. 67 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 9 மனுக்கள் மீது மேல் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டும் தீர்வு காணப்பட்டது.

வாரத்தில் புதன்கிழமை தவிர்த்த பிற நாட்களில் அந்தந்த உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்திரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...