கோவை மாவட்ட ஆயதப்படை அலுவலகத்தில் காவலர் குறைதீர்க்கும் முகாம்

மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மனுக்களின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


கோவை: தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அந்த மனுக்கள் மீதான மறுவிசாரணை ஒவ்வொருவாரமும் புதன்கிழமை அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன்படி காவலர் குறைதீர்க்கும் முகாம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைானத்தில் உள்ள மாவட்ட ஆயதப்படை அலுவலகத்தில் நேற்று மே.29 நடைபெற்றது.



இதில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மனுக்களின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.



இந்த முகாமில் குடும்பபிரச்சினை, பணப்பரிமாற்ற பிரச்சினை, இடப்பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக 79 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் 1 மனு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. 2 மனுக்களுக்கு சி.எஸ்.ஆர். எனப்படும் புகார் ஏற்பு மனு வழங்கப்பட்டது. 67 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 9 மனுக்கள் மீது மேல் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டும் தீர்வு காணப்பட்டது.

வாரத்தில் புதன்கிழமை தவிர்த்த பிற நாட்களில் அந்தந்த உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்திரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...