சரவணம்பட்டியில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளருக்கு ஒரு ஆண்டு சிறை

சரவணம்பட்டியில் வீட்டின் அருகே இடையூறாக இருந்த மின்கம்பத்தை அகற்றுவதற்காக தேவராஜ் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் டி.எம்.ரவீந்திரனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது வீட்டின் அருகே மின்கம்பம் ஒன்று இடையூறாக இருந்தது. இதனை அகற்றக்கோரி கடந்த 2012-ம் ஆண்டு சரவணம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய இளநிலை பொறியாளர் (வினியோகம்) டி.எம்.ரவீந்திரன் (வயது 60) என்பவரை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதற்காக அவர் கடந்த 5-7-2012-ம் ஆண்டு தேவராஜிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.

அப்போது அங்கு மறைந்து இருந்த கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எம்.ரவீந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் (28-05-2024) அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் வழக்கை நீதிபதி எஸ்.மோகனா ரம்யா விசாரித்தார். அப்போது அவர் டி.எம்.ரவீந்திரனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் டி.எஸ்.சிவகுமார் வாதாடினார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் போலீஸ் சூப்பிரண்டு கே.சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாகவும், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி ஒப்படைப்பு அதிகாரியாகவும் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...